Friday, October 23, 2009

நிழல்


நிஜங்களின் பிரதிபலிப்பு
சென்ற பின்னும்
தொடரும் சித்திரம்
தட்ட நினைத்தும்
தட்டி விட முடியாத
சொந்தம் ........

காதல் கோலம்

காதல் என்பது
விசித்திர கோலம்
கண்ணீர் துளிகளே
புள்ளிகள் ஆகும் .......
நஞ்சினால் ஓர் அமுதம்

காதல்

ஒரு பக்கமிருந்தால்

-விஷம்

இரு பக்கம் இருந்தால்

- அமுதம்


எது சரி ...?


பெற்றால் அனுபவிக்கலாம்

-இது மோகத்தின் நசசரிப்பு!

விட்டால் அனுபவிக்கலாம்

- இது தியாகத்தின் உச்சரிப்பு !

அடையாளம்

ஈர நெஞ்சம்
இருப்பதை காட்ட
உலர்ந்த முத்தம்
ஒன்றாவது கொடு !!!

1 comment:

  1. //பெற்றால் அனுபவிக்கலாம்

    -இது மோகத்தின் நசசரிப்பு!

    விட்டால் அனுபவிக்கலாம்

    - இது தியாகத்தின் உச்சரிப்பு !//

    இந்த அடுக்கு சொற்றொடர் நல்லாருக்கு வாசிக்க

    ReplyDelete