பிராத்தனை
நாளைய விடியலுக்காய்
இன்றைய அஸ்தமனம்
விரைகிறது .......
நீ எங்கிருந்தாலும்
நலமாய் வாழ வேண்டும்
என்பதே என்
பிராத்தனைகள்..........
நிழலான உறவு
கனவாக
காட்சியளித்து ,
அதற்குள்
நினைவாக மாறி
நிஜமாக உறவாடி
நிலை பெற்று
நிழலாகி
போவதென்ன ???
மரணம்
அன்னை மடியில்
உறங்கி ,
அலுத்துப் போன
ஜீவனுக்கு
மண்ணின் மடியில்
மறு தூக்கம்
நாடிச் செல்லும்
மன மாற்றம் .....
கனவு
நிஜமென்று நினைத்து தான்
நிம்மதியாய் இருந்தேன் ..
சில வினாடிக்குள்
என் கண்ணில் பாய்ந்த
நிமிஷக் கதிர்கள்
என் உறக்கத்தை
குழப்பிய பின்பு தான்
உணர்ந்தேன் ....
அனைத்துமே
கனவென்று ............
ஒரே ஃபீலிங்ஸா இருக்கே அவ்வ்வ்வ்வ்....
ReplyDelete