அணையாத காதல்
காதல் விடத்தைக்
கக்கி விட்டு
பறந்து விட்டாய் !
காய்ந்த மரம்
கல்லெறி படுவது போல்
காதலித்து நெஞ்சம்
பேதலிக்கிறது ......
கருகிய நெஞ்சத்தில்
உன் முகம்
மலரும் போதெல்லாம்
ஏன் இந்த
விரக்தி மனம்
வஞ்சிக்கின்றது ?
உடை மாற்றுவது போல்
எளிதாக
மாற்றி விட்டாய்
புதிய உறவுகளை
புதுப்பிக்க !!!
என் நெருப்பு
இன்னும்
அணையவில்லை - நீ
தந்த காதல் என்னில்
உள்ளதால் !!!!
கோபம் அழகா இருக்கு...!
ReplyDelete