Thursday, November 19, 2009

அணையாத காதல்


காதல் விடத்தைக்

கக்கி விட்டு

பறந்து விட்டாய் !



காய்ந்த மரம்

கல்லெறி படுவது போல்

காதலித்து நெஞ்சம்

பேதலிக்கிறது ......




கருகிய நெஞ்சத்தில்

உன் முகம்

மலரும் போதெல்லாம்

ஏன் இந்த

விரக்தி மனம்

வஞ்சிக்கின்றது ?



உடை மாற்றுவது போல்

எளிதாக

மாற்றி விட்டாய்

புதிய உறவுகளை

புதுப்பிக்க !!!



என் நெருப்பு

இன்னும்

அணையவில்லை - நீ

தந்த காதல் என்னில்

உள்ளதால் !!!!

1 comment: