Wednesday, November 30, 2011

ஆரம்பமா....? இறுதியா??

எதற்காக பிறந்தேன்
என்று தெரியவில்லை...
அன்பு செலுத்த மறக்கும்
உனக்கு அன்பு செலுத்தவா..?

நம்பிக்கையில்லாத உன் வாழ்வில்
நம்பிக்கைதான் வாழ்க்கை என்று
வாழ்ந்து காட்டவா?

யாருக்காகவும் இதுவரை கண்ணீர் வடித்ததில்லை
கல் மனம் கொண்ட உனக்காக
கண்ணீர் வடிக்கவா?

என் எதிர்காலத்திற்காக கடவுளை வணங்கியதில்லை
உன் எதிர்காலம் நன்றாக அமைய
கடவுளை வணங்கவா??

ஏனடா நான் இப்படி??

இது என் காதலின் ஆரம்பமா?
இல்லை என் அன்பின் இறுதியா??

Monday, October 17, 2011



உன் நினைவு......

என் வாழ்வின்
ஒவ்வொரு நிமிடங்களும்
உன்னோடு ஓடிக்
கொண்டிந்தன
அன்று...........

.................................................................


இன்று
ஒவ்வொரு
நிமிடங்களும்
உன் நினைவுகளோடு
ஒடிக்கொண்டிருக்கின்றன.....


என் கடந்த காலமும்
நீயே......
என் நிகழ்காலமும்
நீயே.........
என் எதிர் காலமும்
நீயே........

.......................................................................

உன்னோடு நான் பழகிய
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும்
மறக்காது அன்பே....


நீ என்னை விட்டு
சென்று விட்டாய்
உன் நினைவுகள்
என்னை விட்டு செல்ல
மறுக்கின்றன........

....................................................................

நினைவு என்னும்
சுழலும் சக்கரத்திலே
இன்பமும் துன்பமும்
மாறி மாறி
சுற்றுகின்றது........

எனக்கு வேண்டாம்
இன்னொரு பிறவி
எல்லாப் பிறவிகளுக்கும்
சேர்த்து அனுபவித்து
விட்டேன் இன்பமும்
துன்பமும் கலந்து........

Wednesday, September 14, 2011


உயிர்வாழ்கிறேன் உனக்காகவே!

உனக்காகவே துடிக்கும்
என் இதயத்தை
உண்மைதானோ என்று நீ
கத்தி கொண்டு கிழித்து
சோதித்து பார்ப்பது சரிதானா??..
உன் நினைவோடு
காத்திருப்பது கடினமில்லை....
உன் நினைவில் நான்
இருப்பதை நீ அறிவித்தால்.........



உன்
நினைவில் இருந்தவள் நான்
அதையும் நான்
அறிவேன் இருந்தாலும்
உற்றார் சொல் மாறியதோ
உன்னை என்ற ஐயம் எனக்கு.
உள்மனம் சொல்கிறது
இல்லை என்று .....


உன்னவள் மன சாந்திக்கு
என்னவனே.........
உன் பதில் வேண்டும் ...
உளறுகிறாள் என்று
எண்ணாதே என்னை..........
உந்தன் அன்பிற்க்கு உறவான
காதலி நான் என்பதை மறவாதே!!
உயிர் போவது ஓர் நொடிதான் ஆனால்
உன் நினைவு என்னை கொல்லுது
ஒவ்வொரு நொடியும் இங்கே...

Monday, July 25, 2011

சுவாசமாய் கலந்தவளே......!!!


நீ.......
என்
இதயப் பாரிஜாதமலர்
என் தோட்டத்திற்கு
நீ வர வேண்டும் ஒரு முறை......
வருவாயா கண்மணி.....?
என் தோட்டத்து ரோஜாக்கள்
உன்னைப் பார்க்க வேண்டுமென்று
பிரியப்படுகின்றன.............

-----------------------------------------------------------------------------------

மழை வரும் முன் வரும்
மண் வாசனை
மழலை வரும் முன் வரும்
மந்திரச் சிரிப்பொலி
இடி வரும் முன் வரும்
மின்னல் கீற்று
கவிதை வரும் முன் வரும்
கற்பனை ஊற்று
எனக்கு பிடித்த இவை அனைத்துமே
என்னுள்..........
இத்தனை மன அதிர்வைத் தந்ததில்லை
நீ வரும் முன் வருகின்ற
உன் பாதக்கொலுசொலியை விட........

-----------------------------------------------------------------------------------

உன்
இதழ்களில் உதிரும்...
முத்துச் சொற்களுக்குப் பதில்......
உன்
கவிதை சிந்தும் கண்களின்
மௌன மொழியை
என்னிடம் தூது விடு அன்பே.......!
உன்
ஒலிச்சந்தப் பேச்சுக்களை விட.........
நிசப்த பரிபாஷையில்
ஆயிரம் அர்த்தம் உணர்கிறேன்
நான்...........!!!

------------------------------------------------------------------------------------

தூண்டிலில் சிக்கும்
மீன்களைப் பார்த்திருக்கிறேன்..........
தூண்டில் போடும் மீன்களை
இன்று தான்
பார்க்கிறேன்..........
உன்
விழிகள்.......!!!

-------------------------------------------------------------------------------------

அன்று..........
முதன் முதலில் உன்னை
தரிசித்த போது...........
என்னையறியாமலே.....
உன் பின்புறம் சிறகுகள்
இருக்கின்றதாவென
சிலிர்த்துப் பார்த்தவன்
நான்.............
அன்று தான்
" தேவதை "
என்ற சொல் எனக்கு
அறிமுகப்படுத்தப்பட்ட
நாள்............!!!

-------------------------------------------------------------------------------------

நீ அழகா......???
உன்
நினைவுகள் அழகா.......???
உன்
மொழி அழகா..???
உன்
வெட்கம் அழகா....???
இனம் பிரிக்க முடியாத படி.......
உன்னுடன்
சம்பந்தப்பட்ட எல்லாமே
பேரழகாய்....................
எப்படி............???

-------------------------------------------------------------------------------------

காயம் படாத
காதல் சிறகாய்......
என் இமைகள் விரிய.....!
யார்க்கும் தெரியாமல்
என்னை ரகசியமாய் உரசும்.....
உன் பார்வையின்
விழி ஈர்ப்பு சக்தியில்.....
என் மனம் ஈர்க்கப்பட்டு...!!
இங்கு வென்றது....
நம் காதலா....???
இல்லை
காதலின் மன ஈர்ப்பு விடியா..........???

----------------------------------------------------------------------------------------

நான்..........
கவிஞனாக்கப்பட்டேன்.......
என் விழிகள்
உன்னை ஸ்பரிசித்ததால்.....
உன்னை விட இனிமையான
கரு உண்டா........
கவிதைக்கு.....!!
நான் எழுதிய முதல்
கவிதை...
உன் பெயர்....!!!

----------------------------------------------------------------------------------------

என் சுவாசத்திற்கு
சொந்தமானவளே.............
உனக்கு நான் இருக்கின்றேன்
என்கிற.......
ஒற்றைப் பார்வையும்
ஓசையற்ற
ஆறுதல் மொழியாய்...........
கற்றைப் புன்னகையும்......
மொத்தமாய் நீ
பரிசளிப்பாயா...?
காத்திருக்கிறேன்......!!!

---------------------------------------------------------------------------------------

Thursday, April 28, 2011



உன்னை நேசித்ததற்காக
அளவுக்கு மீறி தண்டனையடைகிறேன்!!


தளராத கல் நெஞ்சு என் மனது!
கலையாதது உன் மனது !!
அதனால் தான் இன்னமும்
உன் நினைவலைகளில் நான்!!!

....................................................................................

தவறு எங்கே நடந்தது என்று
தெரியவில்லை எனக்கு....
உன்னிடமா அல்லது என்னிடமா???

.......................................................................................

விடையில்லா கேள்விகளை
நான் தொடுக்கிறேன்!!
உன்னிடம் விடைகாண
நீ எனக்கு நிலையில்லாதவன்
என்று புரிந்து கொள்ளாதது தான்
நான் செய்த பிழையோ புரியவில்லை!!!

..............................................................................................

காலம் போன பின்பு தவறுகள்
சுட்டிக்காட்டப்படுவது முறையல்ல.....
உன்னை நேசித்ததற்காக
அளவுக்கு மீறி தண்டனையடைகிறேன்!!

..............................................................................................................

பிரிந்தது உடல் அல்ல..
உயிர் தான்
விட்டு விலகாதது என்றுமே
உன் மீது கொண்ட காதல்!!!

Saturday, April 9, 2011




கண்ணீரிலும் உன் நினைவுகள்.......


நீ என்னுடன்
பேசாத பொழுதுகளிலும்
நான் உன்னுடன்
பேசத்தானே துடித்தேன்......

உன் வார்த்தைகள் என் இதயத்தை
எத்தனையோ முறை அழவைத்தாலூம்
இதயம் உன்னை ஒரு போதும்
வெறுத்தது இல்லை..
உன்னை விலகி செல்ல
நினைத்ததுவும் இல்லை...

உன் நினைவில்
கண்ணீர்த்துளிகள் தான் எனக்கு
உறவாகி போன போதும்
உன் நினைவை சுமை என்று
நான் என்றும் இறக்கி
வைக்க முயன்றதில்லை....

நீயே என் உலகம் என்று நினைத்த
என்னை பிரிய நினைக்க
உன்னால் மட்டும் எப்படி முடிகின்றது.
இரும்பிலே கூட இதயம் உண்டாம்...
நீ மட்டும் ஏன் பிறந்தாய் இதயம் அற்று...
என் கண்களின் ஈரமும்
இதயத்தின் வலியும்
உனக்கு புரியவில்லையா..........

Sunday, March 20, 2011



கிடைக்குமா வாழ்வில் ஓர் வரம்...........


கண்கள் உறங்காமலே
தொடர்கிறது கனவுகள் ..........
நீங்காத நினைவுகளாய்
தொடர்கிறது உன் நினைவுகள்...........
தினமும் என் கனவில்
நீ வருவதாக இருந்தால் ........
காலம் முழுவதும்
கல்லறை வரையிலும்
கண்மூடி காத்திருக்கின்றேன்............

காத்திருப்பதிலும் ஒரு
இதம் இருக்கிறது என்று
உணர்த்தியவன் நீ ........
இருப்பினும் கல்லறை வரை
காத்திருப்பு தேவையா........?

உன் நினைவுகளை
நெஞ்சமதில் பத்திரப்படுத்தியதில்
எஞ்சியது நானும்....
இந்த கவிதை தான்.............

உன் குரல் கேட்க
இதயம் மெட்டுக் கட்டி பறக்கிறது.
என் இதயம் பாடும் இசைதனை
உன் இதயம் கேட்கிறதா........?

என் எண்ணங்களை
எரிக்கிறது பொழுதுகள் ......
ஏதும் வேண்டாம் என்று
எண்ணுகையில் ......
ஏக்கங்களாய் மனதில் இருக்கும்
ஏராளமான கவலைகளை
சொல்லி அழுவதற்கு
ஏற்கும் மனம் வேண்டும்......
கிடைக்குமா வாழ்வில்
ஓர் வரமாக....!

Tuesday, February 15, 2011



உனக்கு ஒரு மடல்...........


உனக்கு ஒரு மடல் - என்னை
மறந்து விட்டாய் என்பதற்கு அல்ல........
உன்னை உள் அன்போடு
நேசித்தேன் என்பதற்காக...!

என் காதலுக்கு கருவாகி
கவிதைக்கு பொருளாகி
எனை காதலித்து
கவி தந்த காதலன் - நீ
ஆதலால் ..............

என் காதலை
இப்போது ஏற்க மறுத்தாலும் - என்
இதய வானிலே எப்போதும் - நீ
இளைய நிலா என்பதால்!

நாலாறு மாதங்கள்
உன் மீது நான் கொண்ட காதல்
ஏழு ஜென்மத்திலும்
மறவா உன் நினைவுகள் என்பதால்!

காதல் என்பது மாயை - என்ற
புரியாத புதிரை - எனக்கு
புரிய வைத்தாய்
என்பதற்கு அல்ல!


பாசங்கள் எல்லாம் வேசங்கள்
என்ற நிஜத்தை
எனக்கு சொல்லாமல் சொன்னவன் - நீ
என்பதால் இறுதியாக
உனக்கு ஒரு மடல்........

Wednesday, January 26, 2011



காட்டிக்கொள்ளாத கண்கள்..



முன்பெல்லாம் பழக்கப்படாதவள்
என்சோகம் சொல்லிக்கொள்ளாமலே
கன்னத்தை நனைத்துவிடும் .....


வேதனையும் வலியும்
கண்ணீரும் விம்மலுமாய்
கடைசிவரை தொடரும்
தனிமை என்னை
தாலாட்டிய போதெல்லாம்
துணைக்குக் கண்ணீர்
துவண்டுவரும்..................


காரணமுள்ள கண்ணீர்
பாசத்தின் பரிசு
நேசத்தின் நிதர்சனம்
ஆசையின் அறுவடை
காலத்தின் படிப்பினை......

நெருடிநெருடி நெஞ்சம்
சுயமிழந்து போனது......
வேதனை வருடல்களால்
வியந்து ஊனமானது இதயம்............
ஏமாற்றத்தின் படிப்பினைகள்
வடுவாக வடிவுகொடுத்தது........



இப்போதெல்லாம் ஏனோ
பிரிவும் துயரும்
புன்னகைக்கிறது.............
தனிமையும் தோல்வியும்
தட்டிக்கொடுக்கிறது..................
நம்பிக்கையூன்றி
நடக்கிறது இதயம்...........

காயமே வாழ்க்கையான
போதுகூட பிடித்திருக்கிறது
காட்டிக்கொள்ளாத கண்கள்...

Sunday, January 9, 2011



என்ன செய்யலாம்??

நீ செய்தது பாவம் என்றால்......
மன்னிக்கலாம்.......

நீ செய்தது தவறு என்றால்.......
தண்டிக்கலாம்....

நீ செய்தது கொலை என்றால்.........
உன்னை தூக்கில்
இட்டுக்கொள்ளலாம்......

நீ செய்தது பிழை என்றால்........
பிழைத்துப்போ
என்றாவது சொல்லலாம்.....

நீ செய்தது.................
துரோகம்........

உன்னை என்ன செய்யலாம்?????????