Wednesday, January 26, 2011



காட்டிக்கொள்ளாத கண்கள்..



முன்பெல்லாம் பழக்கப்படாதவள்
என்சோகம் சொல்லிக்கொள்ளாமலே
கன்னத்தை நனைத்துவிடும் .....


வேதனையும் வலியும்
கண்ணீரும் விம்மலுமாய்
கடைசிவரை தொடரும்
தனிமை என்னை
தாலாட்டிய போதெல்லாம்
துணைக்குக் கண்ணீர்
துவண்டுவரும்..................


காரணமுள்ள கண்ணீர்
பாசத்தின் பரிசு
நேசத்தின் நிதர்சனம்
ஆசையின் அறுவடை
காலத்தின் படிப்பினை......

நெருடிநெருடி நெஞ்சம்
சுயமிழந்து போனது......
வேதனை வருடல்களால்
வியந்து ஊனமானது இதயம்............
ஏமாற்றத்தின் படிப்பினைகள்
வடுவாக வடிவுகொடுத்தது........



இப்போதெல்லாம் ஏனோ
பிரிவும் துயரும்
புன்னகைக்கிறது.............
தனிமையும் தோல்வியும்
தட்டிக்கொடுக்கிறது..................
நம்பிக்கையூன்றி
நடக்கிறது இதயம்...........

காயமே வாழ்க்கையான
போதுகூட பிடித்திருக்கிறது
காட்டிக்கொள்ளாத கண்கள்...

Sunday, January 9, 2011



என்ன செய்யலாம்??

நீ செய்தது பாவம் என்றால்......
மன்னிக்கலாம்.......

நீ செய்தது தவறு என்றால்.......
தண்டிக்கலாம்....

நீ செய்தது கொலை என்றால்.........
உன்னை தூக்கில்
இட்டுக்கொள்ளலாம்......

நீ செய்தது பிழை என்றால்........
பிழைத்துப்போ
என்றாவது சொல்லலாம்.....

நீ செய்தது.................
துரோகம்........

உன்னை என்ன செய்யலாம்?????????