Sunday, January 31, 2010

காதல் போர்க்களம் ........

ஆதாம் ஏவாள் காலம் தொட்டு
இன்று இந்த நிமிடம் வரை
முடிவே இல்லாத யுத்தம் தான் அது .......



விழிகளை ஆயுதங்களாக்கி
நெருடல்களை காயங்களாக்கி
அன்பு மொழிகளை ஈட்டிகளாக்கி
இதய ஏடுகளை ரணங்களாக்கும்
பொல்லாத போர்க்களம் - அது

நிறமற்ற , மணமற்ற, சுவையற்ற
அதனை - அறியார் பாரில் யாருளர் ?
அது எது என அறிய ஆசைப்படுகிறீர்களா
ஒரு முறை உங்களையே நீங்கள்
கேட்டுப்பாருங்கள் - புரிந்துவிடும்
அது எதுவென்று .....!!