Monday, July 25, 2011

சுவாசமாய் கலந்தவளே......!!!


நீ.......
என்
இதயப் பாரிஜாதமலர்
என் தோட்டத்திற்கு
நீ வர வேண்டும் ஒரு முறை......
வருவாயா கண்மணி.....?
என் தோட்டத்து ரோஜாக்கள்
உன்னைப் பார்க்க வேண்டுமென்று
பிரியப்படுகின்றன.............

-----------------------------------------------------------------------------------

மழை வரும் முன் வரும்
மண் வாசனை
மழலை வரும் முன் வரும்
மந்திரச் சிரிப்பொலி
இடி வரும் முன் வரும்
மின்னல் கீற்று
கவிதை வரும் முன் வரும்
கற்பனை ஊற்று
எனக்கு பிடித்த இவை அனைத்துமே
என்னுள்..........
இத்தனை மன அதிர்வைத் தந்ததில்லை
நீ வரும் முன் வருகின்ற
உன் பாதக்கொலுசொலியை விட........

-----------------------------------------------------------------------------------

உன்
இதழ்களில் உதிரும்...
முத்துச் சொற்களுக்குப் பதில்......
உன்
கவிதை சிந்தும் கண்களின்
மௌன மொழியை
என்னிடம் தூது விடு அன்பே.......!
உன்
ஒலிச்சந்தப் பேச்சுக்களை விட.........
நிசப்த பரிபாஷையில்
ஆயிரம் அர்த்தம் உணர்கிறேன்
நான்...........!!!

------------------------------------------------------------------------------------

தூண்டிலில் சிக்கும்
மீன்களைப் பார்த்திருக்கிறேன்..........
தூண்டில் போடும் மீன்களை
இன்று தான்
பார்க்கிறேன்..........
உன்
விழிகள்.......!!!

-------------------------------------------------------------------------------------

அன்று..........
முதன் முதலில் உன்னை
தரிசித்த போது...........
என்னையறியாமலே.....
உன் பின்புறம் சிறகுகள்
இருக்கின்றதாவென
சிலிர்த்துப் பார்த்தவன்
நான்.............
அன்று தான்
" தேவதை "
என்ற சொல் எனக்கு
அறிமுகப்படுத்தப்பட்ட
நாள்............!!!

-------------------------------------------------------------------------------------

நீ அழகா......???
உன்
நினைவுகள் அழகா.......???
உன்
மொழி அழகா..???
உன்
வெட்கம் அழகா....???
இனம் பிரிக்க முடியாத படி.......
உன்னுடன்
சம்பந்தப்பட்ட எல்லாமே
பேரழகாய்....................
எப்படி............???

-------------------------------------------------------------------------------------

காயம் படாத
காதல் சிறகாய்......
என் இமைகள் விரிய.....!
யார்க்கும் தெரியாமல்
என்னை ரகசியமாய் உரசும்.....
உன் பார்வையின்
விழி ஈர்ப்பு சக்தியில்.....
என் மனம் ஈர்க்கப்பட்டு...!!
இங்கு வென்றது....
நம் காதலா....???
இல்லை
காதலின் மன ஈர்ப்பு விடியா..........???

----------------------------------------------------------------------------------------

நான்..........
கவிஞனாக்கப்பட்டேன்.......
என் விழிகள்
உன்னை ஸ்பரிசித்ததால்.....
உன்னை விட இனிமையான
கரு உண்டா........
கவிதைக்கு.....!!
நான் எழுதிய முதல்
கவிதை...
உன் பெயர்....!!!

----------------------------------------------------------------------------------------

என் சுவாசத்திற்கு
சொந்தமானவளே.............
உனக்கு நான் இருக்கின்றேன்
என்கிற.......
ஒற்றைப் பார்வையும்
ஓசையற்ற
ஆறுதல் மொழியாய்...........
கற்றைப் புன்னகையும்......
மொத்தமாய் நீ
பரிசளிப்பாயா...?
காத்திருக்கிறேன்......!!!

---------------------------------------------------------------------------------------