உயிர்வாழ்கிறேன் உனக்காகவே!
உனக்காகவே துடிக்கும்
என் இதயத்தை
உண்மைதானோ என்று நீ
கத்தி கொண்டு கிழித்து
சோதித்து பார்ப்பது சரிதானா??..
உன் நினைவோடு
காத்திருப்பது கடினமில்லை....
உன் நினைவில் நான்
இருப்பதை நீ அறிவித்தால்.........
உன்
நினைவில் இருந்தவள் நான்
அதையும் நான்
அறிவேன் இருந்தாலும்
உற்றார் சொல் மாறியதோ
உன்னை என்ற ஐயம் எனக்கு.
உள்மனம் சொல்கிறது
இல்லை என்று .....