Thursday, April 28, 2011



உன்னை நேசித்ததற்காக
அளவுக்கு மீறி தண்டனையடைகிறேன்!!


தளராத கல் நெஞ்சு என் மனது!
கலையாதது உன் மனது !!
அதனால் தான் இன்னமும்
உன் நினைவலைகளில் நான்!!!

....................................................................................

தவறு எங்கே நடந்தது என்று
தெரியவில்லை எனக்கு....
உன்னிடமா அல்லது என்னிடமா???

.......................................................................................

விடையில்லா கேள்விகளை
நான் தொடுக்கிறேன்!!
உன்னிடம் விடைகாண
நீ எனக்கு நிலையில்லாதவன்
என்று புரிந்து கொள்ளாதது தான்
நான் செய்த பிழையோ புரியவில்லை!!!

..............................................................................................

காலம் போன பின்பு தவறுகள்
சுட்டிக்காட்டப்படுவது முறையல்ல.....
உன்னை நேசித்ததற்காக
அளவுக்கு மீறி தண்டனையடைகிறேன்!!

..............................................................................................................

பிரிந்தது உடல் அல்ல..
உயிர் தான்
விட்டு விலகாதது என்றுமே
உன் மீது கொண்ட காதல்!!!

Saturday, April 9, 2011




கண்ணீரிலும் உன் நினைவுகள்.......


நீ என்னுடன்
பேசாத பொழுதுகளிலும்
நான் உன்னுடன்
பேசத்தானே துடித்தேன்......

உன் வார்த்தைகள் என் இதயத்தை
எத்தனையோ முறை அழவைத்தாலூம்
இதயம் உன்னை ஒரு போதும்
வெறுத்தது இல்லை..
உன்னை விலகி செல்ல
நினைத்ததுவும் இல்லை...

உன் நினைவில்
கண்ணீர்த்துளிகள் தான் எனக்கு
உறவாகி போன போதும்
உன் நினைவை சுமை என்று
நான் என்றும் இறக்கி
வைக்க முயன்றதில்லை....

நீயே என் உலகம் என்று நினைத்த
என்னை பிரிய நினைக்க
உன்னால் மட்டும் எப்படி முடிகின்றது.
இரும்பிலே கூட இதயம் உண்டாம்...
நீ மட்டும் ஏன் பிறந்தாய் இதயம் அற்று...
என் கண்களின் ஈரமும்
இதயத்தின் வலியும்
உனக்கு புரியவில்லையா..........