Wednesday, September 29, 2010

நான் தான் .......!!!


உன் .........
உதட்டின் ஓரத்தில் தான்
எத்தனை கவிதைகள் .....
அதற்கு ....
கவிநயம் தந்தவள்
நான் தான் ........



உன் ....
விழிகளுக்கு பின்னால்
வழுக்கி விழுந்த
என்னை பார் - என்
அன்பு.....
ஊனமாகி விடவில்லை ...



நீ ......
கணக்கெடுப்பு செய்யும்
கட்டழகன் அல்ல ...
ஆனால் ......
நினைவில் நிற்கும்
ஓவியம் ......
நிஜத்தில் நினைவை
தொலைத்து நிற்கின்றேன் .......



உன் .....
வார்த்தைகளுக்கு
வடிவம் தந்தவளும்
நான் தான் .....
உன் சிரிப்பை
சித்திரமாக்கியதும்
நான் தான் .............



உன் .....
இதயத்திற்கு
ஒலியை தந்தவளும்
நான் தான் ....
எனக்கு - நீ
இழப்பையும்
இறப்பையும்
ஏற்படுத்தி விடாதே ............

Wednesday, September 1, 2010



காதல் வாழட்டும் .....


காதலனே !
நீ வருவதற்குள் நான்
மடிந்து விட்டால் - என்
அஸ்தியை மட்டுமாவது - உன்
கையால் கரைத்து விடு
அந்த தொடுகையிலாவது
வாழட்டும் நம் காதல் ...................



கண்ணீர் .....


உன் நினைவுகளை
எழுத முன்
என் கன்னங்கள்
நனைகின்றன ..........
கண்ணீருக்கு பொறுக்கவில்லை
முந்திச்சென்று அது
கடதாசியை
நனைக்கின்றது......


பிரிவு ......


பிரிந்த போதுதான்
தெரிந்தது - எனக்கு
நீ இல்லாமல் வாழ்வது
எப்படி என .......
புரிய வைக்கத்தான்
என் வாழ்வில் - நீ
வந்தாய் என்பது ......