நான் தான் .......!!!
உன் .........
உதட்டின் ஓரத்தில் தான்
எத்தனை கவிதைகள் .....
அதற்கு ....
கவிநயம் தந்தவள்
நான் தான் ........
நீ ......
கணக்கெடுப்பு செய்யும்
கட்டழகன் அல்ல ...
ஆனால் ......
நினைவில் நிற்கும்
ஓவியம் ......
நிஜத்தில் நினைவை
தொலைத்து நிற்கின்றேன் .......
உன் .....
வார்த்தைகளுக்கு
வடிவம் தந்தவளும்
நான் தான் .....
உன் சிரிப்பை
சித்திரமாக்கியதும்
நான் தான் .............