Friday, October 23, 2009

நிழல்


நிஜங்களின் பிரதிபலிப்பு
சென்ற பின்னும்
தொடரும் சித்திரம்
தட்ட நினைத்தும்
தட்டி விட முடியாத
சொந்தம் ........

காதல் கோலம்

காதல் என்பது
விசித்திர கோலம்
கண்ணீர் துளிகளே
புள்ளிகள் ஆகும் .......
நஞ்சினால் ஓர் அமுதம்

காதல்

ஒரு பக்கமிருந்தால்

-விஷம்

இரு பக்கம் இருந்தால்

- அமுதம்


எது சரி ...?


பெற்றால் அனுபவிக்கலாம்

-இது மோகத்தின் நசசரிப்பு!

விட்டால் அனுபவிக்கலாம்

- இது தியாகத்தின் உச்சரிப்பு !

அடையாளம்

ஈர நெஞ்சம்
இருப்பதை காட்ட
உலர்ந்த முத்தம்
ஒன்றாவது கொடு !!!

Sunday, October 18, 2009


பிராத்தனை



நாளைய விடியலுக்காய்

இன்றைய அஸ்தமனம்

விரைகிறது .......

நீ எங்கிருந்தாலும்

நலமாய் வாழ வேண்டும்

என்பதே என்

ிராத்தனைகள்..........


நிழலான உறவு



கண்ணுக்குள்

கனவாக

காட்சியளித்து ,

அதற்குள்

நினைவாக மாறி

நிஜமாக உறவாடி

நிலை பெற்று

நிழலாகி

போவதென்ன ???


மரணம்


அன்னை மடியில்

உறங்கி ,

அலுத்துப் போன

ஜீவனுக்கு

மண்ணின் மடியில்

மறு தூக்கம்

நாடிச் செல்லும்

மன மாற்றம் .....


கனவு


நிஜமென்று நினைத்து தான்

நிம்மதியாய் இருந்தேன் ..

சில வினாடிக்குள்

என் கண்ணில் பாய்ந்த

நிமிஷக் கதிர்கள்

என் உறக்கத்தை

குழப்பிய பின்பு தான்

உணர்ந்தேன் ....

அனைத்துமே

கனவென்று ............

Wednesday, October 14, 2009






உனக்காக .............



கண்ணீர் கண்களின் ஓரங்களில்

ஓய்வில்லாது என்னுடன் உறவாடிக்

கொண்டிருக்கிறது .

அவை என் இதயரணங்களை

ஈரப்படுத்துகின்றன .....



என் கனவுகளும்

நினைவுகளும்

கண் கலங்குகின்றன ...........



இடைவெளிகள் நமக்கிடையில்

பெருக்கங்களை பெருக்கவே

நிலைபெறுகின்றன என்றே

நினைத்து நித்தமும்

மூச்சை சுவாசிக்கிறேன் .......



இரவுகள் நீளமாகி

என் தலையணைகளை

ஈரப்படுத்துகின்றன .............

இறைவன் மட்டும்

ஏனோ என்னவனைப்

போல் என்னைப்

பற்றி சற்றும்

சிந்திக்காமல்



பிரிவுகள் எவராலும்

போற்றப்படுவதில்லை .

வாழ்க்கைக்குள்

எட்டிக் கால்

வைக்கவே பாதங்கள்

பயப்படுகின்றன ...

இவ் உலகை எண்ணி

இதயமோ பதறுகின்றது ....



உன்னால் கிடைக்கும்

ஏமாற்றங்கள் என்னை

ஆற்றவொன்னாத்

துயரங்களுக்குள்

தள்ளிவிடுகின்றன .................



உறக்கமற்ற இரவுகள்

தீயள்ளி வீசுகின்றன ...

சுவாசங்களும்

சஞ்சலப்படுகின்றன

சுகங்கள் மட்டும் என்

வாசற்படிகளுக்கு கூட

வர விரும்புவதில்லை ..........



நான் உன்னை

மட்டும் ஒரு பொழுதும்

மறப்பதில்லை ..

உன்னால் உச்சரிக்கப்பட்ட

அத்தனை வார்த்தைகளும்

இன்று வரை என்

செவிப்பறையில்

பறையடித்த வண்ணமே ............



நான் ஒரு ஊமைத்

தீவாய் ஒற்றைக் குயிலாய்

இவ் உலகில் வாழ்கிறேன் ..

என் எண்ணங்களோ

பிரபஞ்சங்களையும்

தாண்டிச் செல்கின்றன .......



இவ் உலகில்

எங்கிருந்தாலும்

நான் உன்

நினைவுகளைச்

சுமந்தபடியே

வாழ்ந்திருப்பேன் .....



நீ நினைக்கலாம்

நான் உன்னை மறந்து

வாழ்ந்து கொண்டிருப்பதாக .......

உனக்கே தெரியாமல்

உன்னைப் பற்றிய

விமர்சனங்களை

சேகரித்துக் கொண்டு

உன்னுடனேயே வாழ்கிறேன் ........



நீ சுவாசித்து

விட்ட மூச்சுக்காற்று

இப் புவியில்

வளியுடன் சேர்ந்து

என்றாவது ஓர் நாள்

என் சுவாசத்துடன்

நிச்சயம்

சங்கமிக்கும் என்ற

நம்பிக்கையில்

உயிர் வாழ்கிறேன் ...



நீ விழி மூடி

துயில் கொள்ளும்

ஒவ்வொரு

இரவுகளுக்குள்ளும்

என் மடியை உன்

தலையணைகளாக

சமர்ப்பிக்கவே

காத்துக்

கொண்டிருக்கிறேன் ..



என் காத்திருப்புக்கள்

மட்டும் என்னை

விட்டு நீங்க மனமின்றி

நிமிடங்களை பல

யுகங்களாகப்

படைத்து என்னுடனே

சங்கமிக்கின்றன ...



எத்தனை யுகங்கள்

சென்றாலும்

உன் அன்பிற்காக

விழித்திரை இமைக்காமல்

காத்திருப்பேன் .

என் உயிர் உள்ளவரை ......



நீ என்

இதயத்தின்

ஆழத்திற்கே சென்று

என்னுள் வாழ்ந்து

கொண்டிருப்பவன் ....


உன்னால்

மட்டும் தான் என்

உணர்வுகளைப்

புதுப்பிக்க முடியும்

உனக்காக மட்டும்

தான் என் உடல்

இன்று வரை

மண்ணறையை நாட

மறுக்கின்றன .....



என் இறுதி

மூச்சு கூட உன்

மடியில் மண்டியிட

வேண்டும்

என்று தான்

இறைவனிடம் நித்தமும்

மன்றாடுகின்றன ......


உனது அன்பு

மட்டும் பொய்

என்றால் .................

இவ் உலகிலுள்ள

அனைத்துமே

போலிகள் தான் ....


நீ எனக்காகவே

பிறந்து வாழ்ந்து

கொண்டிருக்கிறாய் ..

என்ற நம்பிக்கையில்

தான் இந்த

வேதனை

மிகுந்த உலகைக்

கட்டித் தழுவிக்

கொண்டிருக்கிறேன் .....


உனக்கு மட்டும்

நிம்மதிகளை

அள்ளித்தரவே

நான் என்

அத்தனை

சுகங்களையும்

உன் வாசற்படிக்கே

விரட்டி விடுகிறேன் .

நீ என்னுள்

நிறைந்திருப்பவன் ........





Thursday, October 8, 2009

நானும் கவிதை எழுதுகிறேன் ..........
பருவ வயதில் ஆசையற்று
ஜடமாய் நிற்க
நான் மட்டும் புதுப் பிறவியில்லை ..
உன்னில் ,
உன்னுறவில் உன் மொழியில்
உன்னழகில் எனக்கும்
ஆசை வந்தது !
அதுவரை கற்பனையில் மிதந்து
இன்பத்தில் மூழ்கி
உன்னை ரசித்து என்னை
மறந்து கொண்டிருக்கையில் ,
நீயும் தீனியாய் - என்னைப்
பார்க்க , சிரிக்க
குதுகலிக்க - நான் இன்னும்
முன்னேறி உலகையே மறக்க

என் திறந்த இதயத்தின்
உயிராக
பிரியமான உணர்வுகளில்
கருவாக - நீ உருவாக
உன்னில் - என்
உயிரையும் வைத்து
உணர்வுகளையும் உனக்காய்
சமர்ப்பித்து
களங்கமில்லாமல்
கபடமில்லாமல் காதலை
வேண்டிய போது

சினிமாக்களில்
புளித்து போனது போல்
"நட்புடனேயே பழகினேன் - தொடர்ந்தும்
நண்பர்களாகவே இருப்போம் " என்றாய்
ஆக , அதற்கு முன் - நீ
மொழி பேசிப் பழகியதேயில்லை.....
கனவுகளை
சிதைய வைத்து சோகங்களை
சுமக்க வைத்து பைத்தியமாய்
அலைய வைத்து ரசித்தது - ஏன் ?
கனாக்களில் கூட
அழுததில்லை உனக்காகத் தவிர !
வினாக்களாகவே தவிர
விடைகளாய் நீ
இருந்ததேயில்லை .....!
உனை அறியாமல்
புரியாமல் எனையும் மீறி
என்னிதயம் உனை
சுமந்து கொண்டது ...
ஏன் ???
இது ........ இது தான் காதலோ ??
நான் ஆண்களையே
கண்டதில்லையா ?
பேசியதில்லையா ?
அல்லது
பழகித்தான் இல்லையா ?
இருந்தும் இருந்தும்
நீ மட்டும் ...
இது இது காதலைத்
தூண்டியது நீ அல்லவா !!
நீ ஒதுங்கியிருக்க
நான் மட்டும் காதலித்திருக்க
நியாயமில்லை தான் .....
ப்ரியமானவனே ! மனம்
திறந்து சொல் ; எனை
விரும்பினாயா ? அவ்வாறு
காட்டினாயா ? அல்லது
விரும்பியும் முடியாத நிலையா ???
எனினும் இன்றும் உனை
விரும்புபவளாய் நானில்லை
வேண்டியவனாய் நீயும் இல்லை .
இப்போது தான் சிந்திக்கிறேன் !

ஆனால் இன்னும் உனை

என்னிதயத்தில் காண்கிறேன்

இது ............ எனது முதற் கா............

என்பதாலோ ? உன் உறவினை

விரும்பிய அந்த நாள் ஞாபகங்கள்

இன்றும் இனிக்கிறது ....

கடைசியில் நானும்

கவிதை எழுதுகிறேன் ..............
















Monday, October 5, 2009

எப்போதும் நானிருப்பேன்
காதலே ....!
என்னிரண்டாக உன்னை
அறிந்து வைத்திருக்கிறேன் - ஆனால்
இன்னும் புரிந்து கொள்ளவில்லை
நம் காதலை ,
நான் உன் மீது கொண்ட காதல்
ஆழ்கடலை விட ஆழமென்று நினைத்தேன்
அதனால் தான்
தினறிக்கொண்டு இருக்கிறேன் மீளமுடியாமல்
நானறிவேன் , உன்
ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தமுள்ளதாய்
இப்போதோ ...!
உன் அசைவுகள் ஒரு கணம்
என்னையே அசர வைக்கிறது .
நாடகம் என்கிறாய்
என் காதலை !
துரோகி என்கிறாய்
நீ என்னை ..!
காதலே !
நான் உனக்காக நடிப்பேன் .
ஆனால் நான் உன்னிடம் நடியேன்..
முயன்று பார்த்தேன் , முடியவில்லை
நான் உன் கண்களுக்கு - துரோகியான
காரணம் புரியவில்லை
உன் உள்ளத்தின் வாசல் -எப்போதும்
திறந்திருப்பதாய் நினைத்தேன்
இப்போதோ
உன் மூச்சு காற்றை கூட
கசிய விடாமல் காக்கிறாய் ...!
உன்னிடம் உள்ளதையே
எனக்காக கொடுக்கும் நீ
உள்ளங்கையை நீட்டவே யோசிக்கிறாய் ..
உன் பயணங்களுக்கெல்லாம்
நான் பாதை என்றிருந்தேன்
நீயோ ! என்னையே
தடைப் பாறை என்கிறாய் ...
காதலே !
ஏதோ ஒரு சமுத்திரத்தில்
நீ சலனமில்லாமல்
பயணித்து கொண்டு இருக்கிறாய் ,
என்னை மட்டும் கரையில் ஒதுக்கி விட்டு
உன் நீண்ட பயணத்தில்
எப்போதாவது ஒரு முறை
திரும்பி பார்ப்பாய் .
அப்போது நானிருப்பேன் .
நீ முன்பு பார்த்த
அதே பெண்ணாய் ...!
உன் காதலியாய் ....!

முத்தம்



வாய்கள் சொல்லி

வாய்கள் கேட்கும்

வாலிப ரகசியம் !!



காதல்

விழி வழி ஏற்படும் விபத்து ;

சிலர் இதை

விதி வழி ஏற்படும் விபத்து என்கிறார்கள் !!




ஒரு தடையுத்தரவு !

கோயிலில்லா ஊரில்

குடியிருந்தால் குற்றமில்லை ..

காதலில்லா ஊரில்

கால் வைக்கக் கூடாது ..!!




பிரம்ம ரகசியம்


மனிதா

இறைவனின் பேராற்றலைப்

பெண்ணிடம் பார்

ஆணிடம் தேடாதே !!