உனக்கு ஒரு மடல்...........
உனக்கு ஒரு மடல் - என்னை
மறந்து விட்டாய் என்பதற்கு அல்ல........
உன்னை உள் அன்போடு
நேசித்தேன் என்பதற்காக...!
என் காதலுக்கு கருவாகி
கவிதைக்கு பொருளாகி
எனை காதலித்து
கவி தந்த காதலன் - நீ
ஆதலால் ..............
என் காதலை
இப்போது ஏற்க மறுத்தாலும் - என்
இதய வானிலே எப்போதும் - நீ
இளைய நிலா என்பதால்!
நாலாறு மாதங்கள்
உன் மீது நான் கொண்ட காதல்
ஏழு ஜென்மத்திலும்
மறவா உன் நினைவுகள் என்பதால்!
காதல் என்பது மாயை - என்ற
புரியாத புதிரை - எனக்கு
புரிய வைத்தாய்
என்பதற்கு அல்ல!
பாசங்கள் எல்லாம் வேசங்கள்
என்ற நிஜத்தை
எனக்கு சொல்லாமல் சொன்னவன் - நீ
என்பதால் இறுதியாக
உனக்கு ஒரு மடல்........