Monday, October 5, 2009

எப்போதும் நானிருப்பேன்
காதலே ....!
என்னிரண்டாக உன்னை
அறிந்து வைத்திருக்கிறேன் - ஆனால்
இன்னும் புரிந்து கொள்ளவில்லை
நம் காதலை ,
நான் உன் மீது கொண்ட காதல்
ஆழ்கடலை விட ஆழமென்று நினைத்தேன்
அதனால் தான்
தினறிக்கொண்டு இருக்கிறேன் மீளமுடியாமல்
நானறிவேன் , உன்
ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தமுள்ளதாய்
இப்போதோ ...!
உன் அசைவுகள் ஒரு கணம்
என்னையே அசர வைக்கிறது .
நாடகம் என்கிறாய்
என் காதலை !
துரோகி என்கிறாய்
நீ என்னை ..!
காதலே !
நான் உனக்காக நடிப்பேன் .
ஆனால் நான் உன்னிடம் நடியேன்..
முயன்று பார்த்தேன் , முடியவில்லை
நான் உன் கண்களுக்கு - துரோகியான
காரணம் புரியவில்லை
உன் உள்ளத்தின் வாசல் -எப்போதும்
திறந்திருப்பதாய் நினைத்தேன்
இப்போதோ
உன் மூச்சு காற்றை கூட
கசிய விடாமல் காக்கிறாய் ...!
உன்னிடம் உள்ளதையே
எனக்காக கொடுக்கும் நீ
உள்ளங்கையை நீட்டவே யோசிக்கிறாய் ..
உன் பயணங்களுக்கெல்லாம்
நான் பாதை என்றிருந்தேன்
நீயோ ! என்னையே
தடைப் பாறை என்கிறாய் ...
காதலே !
ஏதோ ஒரு சமுத்திரத்தில்
நீ சலனமில்லாமல்
பயணித்து கொண்டு இருக்கிறாய் ,
என்னை மட்டும் கரையில் ஒதுக்கி விட்டு
உன் நீண்ட பயணத்தில்
எப்போதாவது ஒரு முறை
திரும்பி பார்ப்பாய் .
அப்போது நானிருப்பேன் .
நீ முன்பு பார்த்த
அதே பெண்ணாய் ...!
உன் காதலியாய் ....!

No comments:

Post a Comment