என் காதல்
-
இளமையின் துள்ளலால் ,அனைவருக்கும் இதயங்களில் ஏற்படும் இனம் புரியா இச்சையால் ஏற்பட்டதல்ல என் காதல் ..............
-
அன்னையின் கருவிலிருக்கும் போதே உனக்கான நான் உருவாக்கப்பட்டு உன் முன்னால் சில காலமாய் உலா வர விடப்பட்டவள் ...................
-
உன்னைக் கண்ட பின்பு தான் அவ் உண்மை எனக்கே புரிய ஆரம்பித்தது ................................
-
நான் உன் மீது கொண்ட காதலோ என்னை விட பத்து மாதம் மூப்பெய்தவள்....................
-
நீ என்னைக் கண்டு கொண்ட பின்பும் என்னை இனம் புரிய தாமதமானதேன் ....................?
-
உனக்கானவளை உன் இதயம் இதுவரை ஏன் உணர வைக்கவில்லை ...............................?
-
விழிகளால் கதை பேசி விபத்தாக உன் மனதிற்குள் நான் விழவில்லை என்பதை என்று புரியப் போகிறாய் ?
-
நான் வேண்டி நிற்பது உன்னை மட்டும் தான் உன் உரித்துக்களை அல்ல .........................
-
மாடி வீட்டு சீமான்களையும் , சிதறிச் செல்லும் வெள்ளிக் காசின் சத்தத்திலும் , பறந்து செல்லும் ஊர்திகளையும் பார்த்த பின்பு காதல் கொள்ளும் நம் கன்னியர்கள் மத்தியில் , ஓர் நல்ல இதயத்திற்காய் நான் ஏங்குவது உனக்கு புரியாது தான் ................
-
ஊமைகளின் நெஞ்சறை வார்த்தைகள் ஊராருக்கு கேளாது ..! என் இதயத் துடிப்புகளின் ஓசைகள் உனக்கு கேளாமல் போனதென்ன ...................... காரணம் தான் கைக்கெட்டவில்லை ..............
-
உன்னை உலகிலுள்ள உயிர்களுக்கிடையில் கண்டு கொண்டாலும் என் மனக்கண்ணுக்கு நீ தான் உத்தமராய் தென்படுகிறாய் .......
-
நிழலாய் உன்னை நான் தொடர்கையிலும் , உன் விழிகள் ஏன் கொஞ்சம் குனிர்ந்து பார்க்க மறுக்கிறது ?
-
நீரின் தாகத்தை யாரால் தீர்க்க முடியும் ? இன்று நானும் நீராய் நிலையற்றுப் போய்............
-
உன் மனம் என்றாவது எனக்காக கசிந்து வரும் போது பிரிந்த காலத்தையும் சேர்த்து வாழ்ந்து விடுவோமடா ...........
No comments:
Post a Comment