முத்தம்
வாய்கள் சொல்லி
வாய்கள் கேட்கும்
வாலிப ரகசியம் !!
காதல்
விழி வழி ஏற்படும் விபத்து ;
சிலர் இதை
விதி வழி ஏற்படும் விபத்து என்கிறார்கள் !!
ஒரு தடையுத்தரவு !
கோயிலில்லா ஊரில்
குடியிருந்தால் குற்றமில்லை ..
காதலில்லா ஊரில்
கால் வைக்கக் கூடாது ..!!
பிரம்ம ரகசியம்
மனிதா
இறைவனின் பேராற்றலைப்
பெண்ணிடம் பார்
ஆணிடம் தேடாதே !!
No comments:
Post a Comment