Monday, December 7, 2009

காதல் .....


கனவுகளில் மலர்வதில்லை

காதல் ........

இதயத்தில் மலர்வதே

காதல் .........

இதயம் இறக்கும் வரை

உயிரானவனே .....

உன்னை நினைத்து துடிக்குமடா

என் இதயம் ..........!


அறிந்தேன் ! உணர்ந்தேன் !

உருகிநின்றேன் !



மழையின் வேகம் - மழைத்துளி

என் மேல் பட்ட போது

அறிந்தேன் ....!

தென்றலின் சுகம் - அது

என்னைத் தொட்ட போது

உணர்ந்தேன் .....!

தீயின் சோகம் - காதல்

என்னைச் சுட்ட போது

உருகி நின்றேன் .......!




மேகமே ............
சுட்டெரிக்கும் சூரியனை
சுகம் கொடுக்க மறைக்கும்
வெண் மேகமே .....!
உன்னிடம் உரிமையுடன்
ஒரு சில வினாடிகள் ------


உன் குளிர் துளிகள்
தரணியில் விழுகின்றது
மழையாக.......
உன் பிறப்பு தூய்மை தான் !
சந்தேகமேயில்லை அதில் ..
உன் துளிகள்
சேறுடன் சேர்க்கிறது!
கடலுடன் கலக்கிறது !
சாக்கடையில் சரணடைகிறது
மனிதனும் அப்படித் தானோ ?


Saturday, December 5, 2009

வெண்புறா ....

சமாதானக் கணவன்
மரித்து விட்டதால்
வெள்ளாடை உடுத்திய
விதவை -
வெண்புறா .................

நட்சத்திரங்கள்

கீழே தானே கடல்
மேலே மீன்கள் என்ன செய்கின்றன ?

ஓர் 'அங்க ' நாடகம்

' என் உதட்டில் உன் பெயர் எழுது '
' இச் '
' அட , இத்தனை சிறியதா உன் பெயர்! '

கடற்கரை ....

இதயங்கள் அதிகம்
தொலைந்து போகுமிடம் ........


கவிதை

கனவிழந்து
கண்விழித்த
கரங்கள்
கனவின் நிழலாய்
வரையும்
சித்திரம் ......

Thursday, December 3, 2009

மண்ணறையை நாடி என் உடல் ...................


என் இரவுகள்
மயானமிடுகின்றன
அதற்குள் என்
உடலுக்கும்
உயிருக்கும்
நீண்ட நேர
வாக்குவாதம் ...

இருவரையும்
என்னால்
சாந்தப்படுத்த
முடியவில்லை .
ஒருவரை ஒருவர்
விட்டுப் பிரிந்து
விட்டனர் ...

உள்ளிருந்து ஒப்பாரி
முழங்கியது .
என் வீட்டு வாசலில்
பலர் கூடினர்
எனக்கெதுவும்
புரியவில்லை ...


என் உடல்
உணர்வற்றுத்
தரையில் கிடந்தது .
உள்ளே இருக்கும்
இதயம் மட்டும்
உயிருடன் ..........
நேற்றைய பொழுதை
நெஞ்சுக்குள்ளிருந்து
வெளியனுப்புகிறேன் .
அதில் நிழலாடுகிறது
உன் விம்பம் ......

என் நினைவுகளை

கழற்றிவிட்டு

நிம்மதியாய் நீ

சென்றுவிட்டாய்

நிஜங்களை

மறந்து வாழும்

வித்தை எனக்குத்

தெரியாது ...

உனக்கு

தொல்லையாய் வாழ

என் மனம்

இடமளிக்கவில்லை .

உன் வாழ்க்கை

எல்லையாக

வாழ்ந்தேன் ...


உன் பாசம்

நிறைந்த பார்வை

படரும் வரையில்

என் உடல்

வடுக்கள்

மறையமாட்டேன் என

உடன்படிக்கை

செய்திருந்தன ...

என் உயிரை
உசுப்பிச் சென்ற
உன் முற்சொற்கள் இம்
மரணப் படுக்கையிலும்
என் முன்னே
தோன்றுகின்றன ...
நீ வெறுத்துச்
சென்ற இந்நாள் .
என் கல்லறையில்
பதியப்படவே
என் ஆத்மா
முடிவு செய்து
விட்டது ....

உணர்வுகளைக்
கொன்று விட்டு
உலகைப் பிரிந்த
நேரத்திலும்
என் மனதோ உன்
வரவுக்காய்
தவமிருக்கிறது ....

கல்லறைக்குள்
என் உடலை
காணிக்கையாக விடும்
பொழுதும்
என் இமைத்திரையை
மீறி வரும்
கண்ணீரும் ........

உன் திருமுகம்
ஒரு தரம் காணவே
மற்றவரை நொந்து
கொள்கிறது .
அது அவர்களின்
செவிகளில்
விழ மாட்டாது ....
அதை உனக்கு
மட்டும்
உன் இதயத்தில்
இதுவரை
இருந்த நான்
கூறுவேன் .....
அதை கேட்டு நீ
வந்து விட எண்ணாதே ..
வேண்டாம் ...
வேண்டாம் ....
இப் பாவியின்
இக்கோலத்தை
கண்டு
தாங்குமளவிற்கு
உன் மனம்
இதுவரை
வலிமை பெறவே
இல்லை ....
உன் கால்களை
மறந்தேனும்
என் திசை
நோக்கி
முன் வைக்காதே
நீ வந்து விடாதே ...
அப்போது
உன்னையும் என்னுடன்
வருமாறு நான்
அழைத்து விடலாம்
நீ வந்து விடாதே ..
நான் போகிறேன்
உன் வாழ்வு
சிறக்கட்டும் .
என்னை மறந்து விடு
மன்னித்து விடு ......
உனக்காய் வாழ்ந்திடு
உன் உறவுகளுக்காய்
நீ வாழ்ந்து விடு
ஆனந்தத்தை
அள்ளி வழங்கட்டும்
எதிர்காலம் .......
எதைப் பற்றியும்
அறியாச்
சமூகம் உனைத்
தூற்றலாம் .
அதற்காய்
ஒரு போதும்
சோர்ந்து விடாதே .....

சந்தர்ப்பங்கள்
சாபமாகும்
இறுதித் தருவாயிலும்
உன் நலனுக்காகத் தான்
நான் புதைக்கப்பட்டிருப்பேன்
என கல்லறையிலும்
உயில் எழுதியிருப்பேன் ......


Friday, November 20, 2009

துணையை தேடி ...............


காத்திருக்க நேரமில்லை

மௌனத்தை கலைத்து விடு

அன்று உன் மௌனத்தில்

காதல் கொண்டேன்

இன்று உன் மௌனத்தை

வெறுத்துக் கொண்டிருக்கிறேன் ......


நீ புதிராகாதே , புலப்படாத

விடையாய் போய்விடுவாய்

விட்டு விட்டு ஒளிராதே

நேரடியாக நின்று போய்விடுவாய்


உன் மௌனத்தால் - வதைக்காதே
என்னை
தேய்ந்து போய் விடுவேன்
தேய்பிறையாக



வாடிக் கொண்டிருக்கும் ஒரு மலருக்கு

வர வேண்டும் நீ நீருற்றாக

இறந்து கொண்டிருக்கும்

ஓர் ஆன்மாவிற்கு - துணை வேண்டும்

உயிர் பிழைக்க ..................


மென் மேலும் கொல்லாதே !

தாங்காது என் இதயம்

பேசாமல் இருக்காதே - தூங்காது

என் மனது ................




































என் வாழ்வின் .............

வான் பிறையே ! நீயே பல
விண்மீன்களை காதலிக்கிறாய் ,
நானோ எந்தன் ஆண் மீனுக்காக
காத்துக் கொண்டு இருக்கிறேன் ,
சலசலக்கும் மழையிலும் அவன்
பெயரையே உணர்கின்றேன் ,
கண்ணீர்த் துளியிலும் அவன்
ருவத்தையே காண்கிறேன் ,

அன்பின் இலக்கணமாய் ,
அழகின் சின்னமாய் ,
அமைதியின் வடிவமாய் ,
றிவின் உறைவிடமாய் ,
என் உள்ளத்தின் அணையாத
ீபமாய் அவன் தான் திகழ்கிறான்.
அவனை கண்டு வாடாமலிருக்க என்
னமென்ன காகிதப் பூக்களா?
கார்மேகம் வானை மறைத்தாலும்
ானம் என்றும் கறுப்பதில்லை ,
அவனே என்னை வெறுத்தாலும் என்
ள்ளம் அவனை மறப்பதில்லை ,
நான் கொண்ட காதல் அவன்
வாழ்வில் கலையாக இருக்கலாம் ,
ஆனால் அவன் தான் என் வாழ்வின் ............

Thursday, November 19, 2009

அணையாத காதல்


காதல் விடத்தைக்

கக்கி விட்டு

பறந்து விட்டாய் !



காய்ந்த மரம்

கல்லெறி படுவது போல்

காதலித்து நெஞ்சம்

பேதலிக்கிறது ......




கருகிய நெஞ்சத்தில்

உன் முகம்

மலரும் போதெல்லாம்

ஏன் இந்த

விரக்தி மனம்

வஞ்சிக்கின்றது ?



உடை மாற்றுவது போல்

எளிதாக

மாற்றி விட்டாய்

புதிய உறவுகளை

புதுப்பிக்க !!!



என் நெருப்பு

இன்னும்

அணையவில்லை - நீ

தந்த காதல் என்னில்

உள்ளதால் !!!!

Friday, October 23, 2009

நிழல்


நிஜங்களின் பிரதிபலிப்பு
சென்ற பின்னும்
தொடரும் சித்திரம்
தட்ட நினைத்தும்
தட்டி விட முடியாத
சொந்தம் ........

காதல் கோலம்

காதல் என்பது
விசித்திர கோலம்
கண்ணீர் துளிகளே
புள்ளிகள் ஆகும் .......
நஞ்சினால் ஓர் அமுதம்

காதல்

ஒரு பக்கமிருந்தால்

-விஷம்

இரு பக்கம் இருந்தால்

- அமுதம்


எது சரி ...?


பெற்றால் அனுபவிக்கலாம்

-இது மோகத்தின் நசசரிப்பு!

விட்டால் அனுபவிக்கலாம்

- இது தியாகத்தின் உச்சரிப்பு !

அடையாளம்

ஈர நெஞ்சம்
இருப்பதை காட்ட
உலர்ந்த முத்தம்
ஒன்றாவது கொடு !!!

Sunday, October 18, 2009


பிராத்தனை



நாளைய விடியலுக்காய்

இன்றைய அஸ்தமனம்

விரைகிறது .......

நீ எங்கிருந்தாலும்

நலமாய் வாழ வேண்டும்

என்பதே என்

ிராத்தனைகள்..........


நிழலான உறவு



கண்ணுக்குள்

கனவாக

காட்சியளித்து ,

அதற்குள்

நினைவாக மாறி

நிஜமாக உறவாடி

நிலை பெற்று

நிழலாகி

போவதென்ன ???


மரணம்


அன்னை மடியில்

உறங்கி ,

அலுத்துப் போன

ஜீவனுக்கு

மண்ணின் மடியில்

மறு தூக்கம்

நாடிச் செல்லும்

மன மாற்றம் .....


கனவு


நிஜமென்று நினைத்து தான்

நிம்மதியாய் இருந்தேன் ..

சில வினாடிக்குள்

என் கண்ணில் பாய்ந்த

நிமிஷக் கதிர்கள்

என் உறக்கத்தை

குழப்பிய பின்பு தான்

உணர்ந்தேன் ....

அனைத்துமே

கனவென்று ............

Wednesday, October 14, 2009






உனக்காக .............



கண்ணீர் கண்களின் ஓரங்களில்

ஓய்வில்லாது என்னுடன் உறவாடிக்

கொண்டிருக்கிறது .

அவை என் இதயரணங்களை

ஈரப்படுத்துகின்றன .....



என் கனவுகளும்

நினைவுகளும்

கண் கலங்குகின்றன ...........



இடைவெளிகள் நமக்கிடையில்

பெருக்கங்களை பெருக்கவே

நிலைபெறுகின்றன என்றே

நினைத்து நித்தமும்

மூச்சை சுவாசிக்கிறேன் .......



இரவுகள் நீளமாகி

என் தலையணைகளை

ஈரப்படுத்துகின்றன .............

இறைவன் மட்டும்

ஏனோ என்னவனைப்

போல் என்னைப்

பற்றி சற்றும்

சிந்திக்காமல்



பிரிவுகள் எவராலும்

போற்றப்படுவதில்லை .

வாழ்க்கைக்குள்

எட்டிக் கால்

வைக்கவே பாதங்கள்

பயப்படுகின்றன ...

இவ் உலகை எண்ணி

இதயமோ பதறுகின்றது ....



உன்னால் கிடைக்கும்

ஏமாற்றங்கள் என்னை

ஆற்றவொன்னாத்

துயரங்களுக்குள்

தள்ளிவிடுகின்றன .................



உறக்கமற்ற இரவுகள்

தீயள்ளி வீசுகின்றன ...

சுவாசங்களும்

சஞ்சலப்படுகின்றன

சுகங்கள் மட்டும் என்

வாசற்படிகளுக்கு கூட

வர விரும்புவதில்லை ..........



நான் உன்னை

மட்டும் ஒரு பொழுதும்

மறப்பதில்லை ..

உன்னால் உச்சரிக்கப்பட்ட

அத்தனை வார்த்தைகளும்

இன்று வரை என்

செவிப்பறையில்

பறையடித்த வண்ணமே ............



நான் ஒரு ஊமைத்

தீவாய் ஒற்றைக் குயிலாய்

இவ் உலகில் வாழ்கிறேன் ..

என் எண்ணங்களோ

பிரபஞ்சங்களையும்

தாண்டிச் செல்கின்றன .......



இவ் உலகில்

எங்கிருந்தாலும்

நான் உன்

நினைவுகளைச்

சுமந்தபடியே

வாழ்ந்திருப்பேன் .....



நீ நினைக்கலாம்

நான் உன்னை மறந்து

வாழ்ந்து கொண்டிருப்பதாக .......

உனக்கே தெரியாமல்

உன்னைப் பற்றிய

விமர்சனங்களை

சேகரித்துக் கொண்டு

உன்னுடனேயே வாழ்கிறேன் ........



நீ சுவாசித்து

விட்ட மூச்சுக்காற்று

இப் புவியில்

வளியுடன் சேர்ந்து

என்றாவது ஓர் நாள்

என் சுவாசத்துடன்

நிச்சயம்

சங்கமிக்கும் என்ற

நம்பிக்கையில்

உயிர் வாழ்கிறேன் ...



நீ விழி மூடி

துயில் கொள்ளும்

ஒவ்வொரு

இரவுகளுக்குள்ளும்

என் மடியை உன்

தலையணைகளாக

சமர்ப்பிக்கவே

காத்துக்

கொண்டிருக்கிறேன் ..



என் காத்திருப்புக்கள்

மட்டும் என்னை

விட்டு நீங்க மனமின்றி

நிமிடங்களை பல

யுகங்களாகப்

படைத்து என்னுடனே

சங்கமிக்கின்றன ...



எத்தனை யுகங்கள்

சென்றாலும்

உன் அன்பிற்காக

விழித்திரை இமைக்காமல்

காத்திருப்பேன் .

என் உயிர் உள்ளவரை ......



நீ என்

இதயத்தின்

ஆழத்திற்கே சென்று

என்னுள் வாழ்ந்து

கொண்டிருப்பவன் ....


உன்னால்

மட்டும் தான் என்

உணர்வுகளைப்

புதுப்பிக்க முடியும்

உனக்காக மட்டும்

தான் என் உடல்

இன்று வரை

மண்ணறையை நாட

மறுக்கின்றன .....



என் இறுதி

மூச்சு கூட உன்

மடியில் மண்டியிட

வேண்டும்

என்று தான்

இறைவனிடம் நித்தமும்

மன்றாடுகின்றன ......


உனது அன்பு

மட்டும் பொய்

என்றால் .................

இவ் உலகிலுள்ள

அனைத்துமே

போலிகள் தான் ....


நீ எனக்காகவே

பிறந்து வாழ்ந்து

கொண்டிருக்கிறாய் ..

என்ற நம்பிக்கையில்

தான் இந்த

வேதனை

மிகுந்த உலகைக்

கட்டித் தழுவிக்

கொண்டிருக்கிறேன் .....


உனக்கு மட்டும்

நிம்மதிகளை

அள்ளித்தரவே

நான் என்

அத்தனை

சுகங்களையும்

உன் வாசற்படிக்கே

விரட்டி விடுகிறேன் .

நீ என்னுள்

நிறைந்திருப்பவன் ........