துணையை தேடி ...............
காத்திருக்க நேரமில்லை
மௌனத்தை கலைத்து விடு
அன்று உன் மௌனத்தில்
காதல் கொண்டேன்
இன்று உன் மௌனத்தை
வெறுத்துக் கொண்டிருக்கிறேன் ......
நீ புதிராகாதே , புலப்படாத
விடையாய் போய்விடுவாய்
விட்டு விட்டு ஒளிராதே
நேரடியாக நின்று போய்விடுவாய்
உன் மௌனத்தால் - வதைக்காதே
என்னை
தேய்ந்து போய் விடுவேன்
தேய்பிறையாக
என்னை
தேய்ந்து போய் விடுவேன்
தேய்பிறையாக
வாடிக் கொண்டிருக்கும் ஒரு மலருக்கு
வர வேண்டும் நீ நீருற்றாக
இறந்து கொண்டிருக்கும்
ஓர் ஆன்மாவிற்கு - துணை வேண்டும்
உயிர் பிழைக்க ..................
மென் மேலும் கொல்லாதே !
தாங்காது என் இதயம்
பேசாமல் இருக்காதே - தூங்காது
என் மனது ................