Friday, November 20, 2009

துணையை தேடி ...............


காத்திருக்க நேரமில்லை

மௌனத்தை கலைத்து விடு

அன்று உன் மௌனத்தில்

காதல் கொண்டேன்

இன்று உன் மௌனத்தை

வெறுத்துக் கொண்டிருக்கிறேன் ......


நீ புதிராகாதே , புலப்படாத

விடையாய் போய்விடுவாய்

விட்டு விட்டு ஒளிராதே

நேரடியாக நின்று போய்விடுவாய்


உன் மௌனத்தால் - வதைக்காதே
என்னை
தேய்ந்து போய் விடுவேன்
தேய்பிறையாக



வாடிக் கொண்டிருக்கும் ஒரு மலருக்கு

வர வேண்டும் நீ நீருற்றாக

இறந்து கொண்டிருக்கும்

ஓர் ஆன்மாவிற்கு - துணை வேண்டும்

உயிர் பிழைக்க ..................


மென் மேலும் கொல்லாதே !

தாங்காது என் இதயம்

பேசாமல் இருக்காதே - தூங்காது

என் மனது ................




































என் வாழ்வின் .............

வான் பிறையே ! நீயே பல
விண்மீன்களை காதலிக்கிறாய் ,
நானோ எந்தன் ஆண் மீனுக்காக
காத்துக் கொண்டு இருக்கிறேன் ,
சலசலக்கும் மழையிலும் அவன்
பெயரையே உணர்கின்றேன் ,
கண்ணீர்த் துளியிலும் அவன்
ருவத்தையே காண்கிறேன் ,

அன்பின் இலக்கணமாய் ,
அழகின் சின்னமாய் ,
அமைதியின் வடிவமாய் ,
றிவின் உறைவிடமாய் ,
என் உள்ளத்தின் அணையாத
ீபமாய் அவன் தான் திகழ்கிறான்.
அவனை கண்டு வாடாமலிருக்க என்
னமென்ன காகிதப் பூக்களா?
கார்மேகம் வானை மறைத்தாலும்
ானம் என்றும் கறுப்பதில்லை ,
அவனே என்னை வெறுத்தாலும் என்
ள்ளம் அவனை மறப்பதில்லை ,
நான் கொண்ட காதல் அவன்
வாழ்வில் கலையாக இருக்கலாம் ,
ஆனால் அவன் தான் என் வாழ்வின் ............

Thursday, November 19, 2009

அணையாத காதல்


காதல் விடத்தைக்

கக்கி விட்டு

பறந்து விட்டாய் !



காய்ந்த மரம்

கல்லெறி படுவது போல்

காதலித்து நெஞ்சம்

பேதலிக்கிறது ......




கருகிய நெஞ்சத்தில்

உன் முகம்

மலரும் போதெல்லாம்

ஏன் இந்த

விரக்தி மனம்

வஞ்சிக்கின்றது ?



உடை மாற்றுவது போல்

எளிதாக

மாற்றி விட்டாய்

புதிய உறவுகளை

புதுப்பிக்க !!!



என் நெருப்பு

இன்னும்

அணையவில்லை - நீ

தந்த காதல் என்னில்

உள்ளதால் !!!!