காதல்....
நேற்றைக்கும்
இன்றைக்கும்
நினைவுகள் வேறு......!
என்
உயிராய் என்னுள்
கலந்தவளே....!
என் நினைவையே
எனக்கு
மறக்கச் செய்தவளே....
நேற்று
நான்
சுதந்திரப் பறவையாய்....
இன்று
உன்
மனச்சிறையில்
கைதியாய்....!
....................................................................................................................................
உன்னிடம்
உணர்ச்சி பூர்வமாக
ஏற்பட்டது....
இந்த
ஈர்ப்பு நிலை....
உன்
ரசனை.... பேச்சு....
அறிவு.... கம்பீரம்.....
எனை ஈர்த்தது....
உன் அக அழகு....
உன்னுடன் சேர்ந்து
பகிர்ந்து
பரவசம் கொள்ள....
எத்தனை கோடி
விஷயங்கள்...?
உன் மேல்
நான் கொண்ட
அன்பின் ஆயுள்....
மரணம் வந்தென்னை
மடியேற்றும் நிமிஷம்....!
இன்று
யோசிப்பதை
தவிர்த்து விடாதே...!
நாளை..........
ஒரு காதல்
தோல்விக்கு நாள்
குறித்து விடாதே.......