Wednesday, October 14, 2009






உனக்காக .............



கண்ணீர் கண்களின் ஓரங்களில்

ஓய்வில்லாது என்னுடன் உறவாடிக்

கொண்டிருக்கிறது .

அவை என் இதயரணங்களை

ஈரப்படுத்துகின்றன .....



என் கனவுகளும்

நினைவுகளும்

கண் கலங்குகின்றன ...........



இடைவெளிகள் நமக்கிடையில்

பெருக்கங்களை பெருக்கவே

நிலைபெறுகின்றன என்றே

நினைத்து நித்தமும்

மூச்சை சுவாசிக்கிறேன் .......



இரவுகள் நீளமாகி

என் தலையணைகளை

ஈரப்படுத்துகின்றன .............

இறைவன் மட்டும்

ஏனோ என்னவனைப்

போல் என்னைப்

பற்றி சற்றும்

சிந்திக்காமல்



பிரிவுகள் எவராலும்

போற்றப்படுவதில்லை .

வாழ்க்கைக்குள்

எட்டிக் கால்

வைக்கவே பாதங்கள்

பயப்படுகின்றன ...

இவ் உலகை எண்ணி

இதயமோ பதறுகின்றது ....



உன்னால் கிடைக்கும்

ஏமாற்றங்கள் என்னை

ஆற்றவொன்னாத்

துயரங்களுக்குள்

தள்ளிவிடுகின்றன .................



உறக்கமற்ற இரவுகள்

தீயள்ளி வீசுகின்றன ...

சுவாசங்களும்

சஞ்சலப்படுகின்றன

சுகங்கள் மட்டும் என்

வாசற்படிகளுக்கு கூட

வர விரும்புவதில்லை ..........



நான் உன்னை

மட்டும் ஒரு பொழுதும்

மறப்பதில்லை ..

உன்னால் உச்சரிக்கப்பட்ட

அத்தனை வார்த்தைகளும்

இன்று வரை என்

செவிப்பறையில்

பறையடித்த வண்ணமே ............



நான் ஒரு ஊமைத்

தீவாய் ஒற்றைக் குயிலாய்

இவ் உலகில் வாழ்கிறேன் ..

என் எண்ணங்களோ

பிரபஞ்சங்களையும்

தாண்டிச் செல்கின்றன .......



இவ் உலகில்

எங்கிருந்தாலும்

நான் உன்

நினைவுகளைச்

சுமந்தபடியே

வாழ்ந்திருப்பேன் .....



நீ நினைக்கலாம்

நான் உன்னை மறந்து

வாழ்ந்து கொண்டிருப்பதாக .......

உனக்கே தெரியாமல்

உன்னைப் பற்றிய

விமர்சனங்களை

சேகரித்துக் கொண்டு

உன்னுடனேயே வாழ்கிறேன் ........



நீ சுவாசித்து

விட்ட மூச்சுக்காற்று

இப் புவியில்

வளியுடன் சேர்ந்து

என்றாவது ஓர் நாள்

என் சுவாசத்துடன்

நிச்சயம்

சங்கமிக்கும் என்ற

நம்பிக்கையில்

உயிர் வாழ்கிறேன் ...



நீ விழி மூடி

துயில் கொள்ளும்

ஒவ்வொரு

இரவுகளுக்குள்ளும்

என் மடியை உன்

தலையணைகளாக

சமர்ப்பிக்கவே

காத்துக்

கொண்டிருக்கிறேன் ..



என் காத்திருப்புக்கள்

மட்டும் என்னை

விட்டு நீங்க மனமின்றி

நிமிடங்களை பல

யுகங்களாகப்

படைத்து என்னுடனே

சங்கமிக்கின்றன ...



எத்தனை யுகங்கள்

சென்றாலும்

உன் அன்பிற்காக

விழித்திரை இமைக்காமல்

காத்திருப்பேன் .

என் உயிர் உள்ளவரை ......



நீ என்

இதயத்தின்

ஆழத்திற்கே சென்று

என்னுள் வாழ்ந்து

கொண்டிருப்பவன் ....


உன்னால்

மட்டும் தான் என்

உணர்வுகளைப்

புதுப்பிக்க முடியும்

உனக்காக மட்டும்

தான் என் உடல்

இன்று வரை

மண்ணறையை நாட

மறுக்கின்றன .....



என் இறுதி

மூச்சு கூட உன்

மடியில் மண்டியிட

வேண்டும்

என்று தான்

இறைவனிடம் நித்தமும்

மன்றாடுகின்றன ......


உனது அன்பு

மட்டும் பொய்

என்றால் .................

இவ் உலகிலுள்ள

அனைத்துமே

போலிகள் தான் ....


நீ எனக்காகவே

பிறந்து வாழ்ந்து

கொண்டிருக்கிறாய் ..

என்ற நம்பிக்கையில்

தான் இந்த

வேதனை

மிகுந்த உலகைக்

கட்டித் தழுவிக்

கொண்டிருக்கிறேன் .....


உனக்கு மட்டும்

நிம்மதிகளை

அள்ளித்தரவே

நான் என்

அத்தனை

சுகங்களையும்

உன் வாசற்படிக்கே

விரட்டி விடுகிறேன் .

நீ என்னுள்

நிறைந்திருப்பவன் ........





No comments:

Post a Comment