Monday, November 29, 2010



போய்விடு.........!!!!!!!


உந்தன் தொலைபேசி
அழைப்புக்கள்...............
என்னை உன்னோடு பேச
தூண்டினாலும்............
நீ இறுதியாய் சொன்ன
வார்த்தைகள்.........
வேண்டாமென தடுத்து
விடுகிறது...........




நான் சொன்னேனா என்னை
காதலி என்று..............
நீயாய் வந்தாய் உன்னை
பிடித்திருக்கிறது என்றாய்.........
என்னென்னவோ பேசினாய்........
ஒரு முறை இது நட்பு என்றாய்.....
இல்லை காதல் என்றாய்......
இறுதியில்..................................................
ஒன்றுமில்லை நீ வேறு
நான் வேறு என்று பிரிந்து
சென்றாய்.....................
இன்று மீண்டும் நீயின்றி...........
நான் இல்லை என
வசனம் பேசுகிறாய்............



நீ காதலித்த போதும்........
காதல் வேண்டாம் என
விலகிய போதும்...........
நீ என்னைப் பற்றி சிந்தித்தாயா...????
நான் உன் கைபொம்மையல்ல........
எனக்கும் இதயமுண்டு.......
இனியும்
என்னை தொடராதே.............
என் இதயம்
செத்துப் போய்விட்டது........
முயற்சிக்காதே.......
தோற்றுப் போவாய்..........
அதை உன் இதயம் தாங்காது..........




Sunday, November 21, 2010




மனதின் மூலையில்........



உன் பாத சுவடுகளின் வழியே
நான் சென்றடைந்த
பயணங்கள்............

காற்றை அலசி
நீ சுவாசித்த மூச்சை தேடியலைந்த
நிமிஷங்கள்............

மணல் வெளியில்
உன் பெயரெழுதி அதை
தொட்டு இரசித்த
கணங்கள்........

நெஞ்சக் கோப்பையில்
உன்னை மட்டும் நிறைத்து - நான்
நிறைந்திருந்த நொடிகள்........

அனைத்துமே
இன்று கனவாய்......
வெறும் கனவாய்............
மாறிப் போனாலும்.......

மனதின் ஒரு மூலையில்
நான் மனனம் செய்த
பத்துக் கட்டளையாய்
மறவாமல் (மறையாமல்) இருக்கிறாய்
நீ மறந்திடு என்று
சொன்ன பிறகும்..........





Monday, November 8, 2010



உன் பிரிவில்.........



அழும்போது கூட சிரித்தேன் - நீ
என் அருகில் இருக்கும் போது
சிரிப்பதாய் நடிக்கக்கூட
முடியவில்லை உன் பிரிவில்...........

உன் நினைவுகள் சுமக்கும்
என் இதயகூடு
சல்லரித்து சாவின்
விளிம்பில் இன்று....

உன்னை மறக்க நினைத்து
விழி மூடும்போதுகூட
உன் விம்பமே காட்சிகளாக
மறக்கவும் முடியவில்லை
நினைக்கவும் உரிமையில்லை.
நரக வேதனையில் நான்...

உன்னோடு கழித்த நாட்கள்
பல ஜென்மங்கள் வாழ்ந்த
இன்பத்தை தந்தாலும்
நீ என்னை பிரியும்
ஒவ்வொரு வினாடியும்
அடுத்த பிறப்பையும்
கொல்லுவதாய் கசக்குதடா