Wednesday, February 3, 2010

கனவுகள் கலைந்த போது.....!!

நான் -
கனவுகளில் கரைந்திருந்த போது
நீ -
தூக்கத்தில் துக்கமுரைத்தாய் ..
சோகங்களை
சுகமாக்க நினைத்தவளுக்கு
சோகங்களை
மட்டுமே தந்து
சுகங்கண்டதும்
நீ .......
வானத்துப் பறவைகளை
வேடிக்கைக்காக
வாடிக்கையாக
வேட்டு வைத்ததும்
நீ ........
உதிர்ந்த உறவுகளை
உள்ளுக்குள் தேடிய போது
அவற்றை -
உதற வைத்ததும்
நீ தான் ......
யோசி .....
உன்னையே யோசித்து
உண்மையாக நேசித்து
உன்னை
தரிசிக்கத் தவமிருந்த
என்னைப்பற்றி
கொஞ்சமாவது
யோசி .........
உனக்கு -
மௌனம் தான்
தேசிய மொழி என்றால் .......
எட்டாமல்
எட்டி நிற்பது தான் - உன்
வாடிக்கை என்றால் ....
மல்லிகை வாசத்தை
மூடி வைக்கும்
மடப்பழக்கம் உள்ளதென்றால் ....
தீண்டும் தென்றலை
தட்டி விடும்
துர்க்குணம் உனது என்றால் ......
மான் விழி மறைக்க
இமைக் கொம்புகளை
அடிக்கடி துடிக்கவிடும்
காவல் எண்ணம்
உன்னுள் -
உள்ளதென்றால் .......
விழி நோக்கும் போது
புத்தகங்களால்
முத்திரை முகத்தை
மூடி மறைக்க
எண்ணமிருந்தால் ........
.......................................
......................................
வேண்டாம்
வேண்டவே வேண்டாம்
உன்னால் -
தூக்கங்களைத்
தொலைத்தது போதும்
உள்ளத்தை
உருக்கியது போதும்
உயிரைக்
கரைத்ததும் போதும்
உறவுகளை
ஒதுக்கியதும் போதும்
பிரிவுகளை
வெறுத்ததும் போதும்
.....................................
.....................................
சோகங்களை
மட்டுமே தந்து
நான் -
கனவுகளில்
கரைந்திருக்கும் போதே
தூக்கத்தில்
துக்கமுரைத்தாய்
இத்தனை நாள்
உன் -
நினைவுகளுடன்
உறங்கியது போதும்
இனியாவது -
தனியாக தூங்க விடு .....