Friday, November 20, 2009

துணையை தேடி ...............


காத்திருக்க நேரமில்லை

மௌனத்தை கலைத்து விடு

அன்று உன் மௌனத்தில்

காதல் கொண்டேன்

இன்று உன் மௌனத்தை

வெறுத்துக் கொண்டிருக்கிறேன் ......


நீ புதிராகாதே , புலப்படாத

விடையாய் போய்விடுவாய்

விட்டு விட்டு ஒளிராதே

நேரடியாக நின்று போய்விடுவாய்


உன் மௌனத்தால் - வதைக்காதே
என்னை
தேய்ந்து போய் விடுவேன்
தேய்பிறையாக



வாடிக் கொண்டிருக்கும் ஒரு மலருக்கு

வர வேண்டும் நீ நீருற்றாக

இறந்து கொண்டிருக்கும்

ஓர் ஆன்மாவிற்கு - துணை வேண்டும்

உயிர் பிழைக்க ..................


மென் மேலும் கொல்லாதே !

தாங்காது என் இதயம்

பேசாமல் இருக்காதே - தூங்காது

என் மனது ................




































4 comments:

  1. VERY NICE POEM LOVE FEELINGS VERY VERY SUPPER

    ReplyDelete
  2. உணர்வுகளின் உச்சகட்ட வெளிப்பாடு

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. oru kannir thuli tsunami ithu,, nice dear

    ReplyDelete