Saturday, December 5, 2009

வெண்புறா ....

சமாதானக் கணவன்
மரித்து விட்டதால்
வெள்ளாடை உடுத்திய
விதவை -
வெண்புறா .................

நட்சத்திரங்கள்

கீழே தானே கடல்
மேலே மீன்கள் என்ன செய்கின்றன ?

ஓர் 'அங்க ' நாடகம்

' என் உதட்டில் உன் பெயர் எழுது '
' இச் '
' அட , இத்தனை சிறியதா உன் பெயர்! '

கடற்கரை ....

இதயங்கள் அதிகம்
தொலைந்து போகுமிடம் ........


கவிதை

கனவிழந்து
கண்விழித்த
கரங்கள்
கனவின் நிழலாய்
வரையும்
சித்திரம் ......

1 comment:

  1. //' என் உதட்டில் உன் பெயர் எழுது '
    ' இச் '
    ' அட , இத்தனை சிறியதா உன் பெயர்! '//

    wow..superb...!

    ReplyDelete