Friday, November 20, 2009

என் வாழ்வின் .............

வான் பிறையே ! நீயே பல
விண்மீன்களை காதலிக்கிறாய் ,
நானோ எந்தன் ஆண் மீனுக்காக
காத்துக் கொண்டு இருக்கிறேன் ,
சலசலக்கும் மழையிலும் அவன்
பெயரையே உணர்கின்றேன் ,
கண்ணீர்த் துளியிலும் அவன்
ருவத்தையே காண்கிறேன் ,

அன்பின் இலக்கணமாய் ,
அழகின் சின்னமாய் ,
அமைதியின் வடிவமாய் ,
றிவின் உறைவிடமாய் ,
என் உள்ளத்தின் அணையாத
ீபமாய் அவன் தான் திகழ்கிறான்.
அவனை கண்டு வாடாமலிருக்க என்
னமென்ன காகிதப் பூக்களா?
கார்மேகம் வானை மறைத்தாலும்
ானம் என்றும் கறுப்பதில்லை ,
அவனே என்னை வெறுத்தாலும் என்
ள்ளம் அவனை மறப்பதில்லை ,
நான் கொண்ட காதல் அவன்
வாழ்வில் கலையாக இருக்கலாம் ,
ஆனால் அவன் தான் என் வாழ்வின் ............

1 comment:

  1. ??? :(

    ஓஹ் வெற்றிடத்தை நிரப்புபவன்

    க்ளாஸ்...

    ReplyDelete