என் வாழ்வின் .............
வான் பிறையே ! நீயே பல
விண்மீன்களை காதலிக்கிறாய் ,
நானோ எந்தன் ஆண் மீனுக்காக
காத்துக் கொண்டு இருக்கிறேன் ,
சலசலக்கும் மழையிலும் அவன்
பெயரையே உணர்கின்றேன் ,
கண்ணீர்த் துளியிலும் அவன்
உருவத்தையே காண்கிறேன் ,
அன்பின் இலக்கணமாய் ,
அழகின் சின்னமாய் ,
அமைதியின் வடிவமாய் ,
அறிவின் உறைவிடமாய் ,
என் உள்ளத்தின் அணையாத
தீபமாய் அவன் தான் திகழ்கிறான்.
அவனை கண்டு வாடாமலிருக்க என்
மனமென்ன காகிதப் பூக்களா?
கார்மேகம் வானை மறைத்தாலும்
வானம் என்றும் கறுப்பதில்லை ,
அவனே என்னை வெறுத்தாலும் என்
உள்ளம் அவனை மறப்பதில்லை ,
நான் கொண்ட காதல் அவன்
வாழ்வில் கலையாக இருக்கலாம் ,
ஆனால் அவன் தான் என் வாழ்வின் ............
??? :(
ReplyDeleteஓஹ் வெற்றிடத்தை நிரப்புபவன்
க்ளாஸ்...