Saturday, April 9, 2011




கண்ணீரிலும் உன் நினைவுகள்.......


நீ என்னுடன்
பேசாத பொழுதுகளிலும்
நான் உன்னுடன்
பேசத்தானே துடித்தேன்......

உன் வார்த்தைகள் என் இதயத்தை
எத்தனையோ முறை அழவைத்தாலூம்
இதயம் உன்னை ஒரு போதும்
வெறுத்தது இல்லை..
உன்னை விலகி செல்ல
நினைத்ததுவும் இல்லை...

உன் நினைவில்
கண்ணீர்த்துளிகள் தான் எனக்கு
உறவாகி போன போதும்
உன் நினைவை சுமை என்று
நான் என்றும் இறக்கி
வைக்க முயன்றதில்லை....

நீயே என் உலகம் என்று நினைத்த
என்னை பிரிய நினைக்க
உன்னால் மட்டும் எப்படி முடிகின்றது.
இரும்பிலே கூட இதயம் உண்டாம்...
நீ மட்டும் ஏன் பிறந்தாய் இதயம் அற்று...
என் கண்களின் ஈரமும்
இதயத்தின் வலியும்
உனக்கு புரியவில்லையா..........

1 comment:

  1. புரிகிறது ஆனால் ஒன்றும் பண்ண முடியல........

    ReplyDelete