Thursday, April 28, 2011



உன்னை நேசித்ததற்காக
அளவுக்கு மீறி தண்டனையடைகிறேன்!!


தளராத கல் நெஞ்சு என் மனது!
கலையாதது உன் மனது !!
அதனால் தான் இன்னமும்
உன் நினைவலைகளில் நான்!!!

....................................................................................

தவறு எங்கே நடந்தது என்று
தெரியவில்லை எனக்கு....
உன்னிடமா அல்லது என்னிடமா???

.......................................................................................

விடையில்லா கேள்விகளை
நான் தொடுக்கிறேன்!!
உன்னிடம் விடைகாண
நீ எனக்கு நிலையில்லாதவன்
என்று புரிந்து கொள்ளாதது தான்
நான் செய்த பிழையோ புரியவில்லை!!!

..............................................................................................

காலம் போன பின்பு தவறுகள்
சுட்டிக்காட்டப்படுவது முறையல்ல.....
உன்னை நேசித்ததற்காக
அளவுக்கு மீறி தண்டனையடைகிறேன்!!

..............................................................................................................

பிரிந்தது உடல் அல்ல..
உயிர் தான்
விட்டு விலகாதது என்றுமே
உன் மீது கொண்ட காதல்!!!

2 comments: