Wednesday, March 24, 2010

காதல்

கண்கள் செய்யும் யுத்தத்தால்
இதயங்கள் இரண்டும் இடம் மாறி
வலியுடன் கூடிய சுகத்தால்
இறப்பு மட்டும் உடனிருப்பது - அது தான்
யாவரும் அறிந்த மூன்றேழுத்து முத்தானது ....
விழிகள்
ஆயிரம் மொழிகள் பேசும்
நூறாயிரம் ஜாடைகள் சொல்லும்
உனக்காக நான் உள்ளேன்
என்று கூறும் - இருப்பினும்
அதை நம்பி ஏமாந்தோர் பலர் ..
அதையே நம்பி இருப்போர் சிலர் ...
இப்போதும் எத்தனை விழிகள்
நலம் விசாரிக்கின்றன என்பதை
யாரறிவார் ????????

No comments:

Post a Comment