Monday, March 22, 2010

காதல் வலி

நான் சாகும் வரை
என்னை
சாகடித்துக் கொண்டு
இருக்கும்
உன் நினைவுகள் ...
உன் மீது
காதல் கொண்டதினால்
எனக்கு எஞ்சியிருப்பது
உன் நினைவுகள் தான் ..
உன்னை நினைத்து
விழிகள் அழ தொடங்கியதும்
என்னை அறியாமலே
என் கைகள்
கவிதை எழுத ஆரம்பித்து
விடுகின்றன ........
மனதார நேசித்தேன் உன்னை
மறந்து விட்டாய் நீ என்னை
மனமுடைந்து போனேன்
உன் வார்த்தையினால்
மனம் விட்டு பேசும் உரிமை
எனக்கின்றி
மனநோயாளி ஆகிவிட்டேன்
இன்று ......
என் வாழ்வில்
கண்ணீர் கூட
துணையானது
நான் உன் மீது
கொண்ட
காதலினால் ...
நீ என்னை
வெறுத்தாலும்
என் காதல் நெஞ்சம்
என்றும் உன்னையே
நாடி வரும்
நீ எங்கு சென்றாலும் ....
என் உடல்
இறுதி மூச்சுக்காற்றாக
சுவாசிக்கும் போதும்
நீயே என் சுவாசமென்று
நினைத்து சுவாசிப்பேனடா...
இறுதி மூச்சு விடும் போதும்
உன்னையே நேசிப்பேன் ....

1 comment:

  1. யோவ் யாருய்யா அது இந்த புள்ளைய அழுக வைக்கிறது? அதுவும் நல்லதுக்குத்தான் ஃபீலிங்ஸ்ல எழுதுனாலும் நல்லாருக்கு....

    ReplyDelete