Saturday, March 27, 2010

காதலே உன்னால் .........

நான் மௌனமாக
இருக்கிறேன்
என்று அன்பே
அசட்டையாக
இருந்து விடாதே
மௌனத்தின் உள்ளே தான்
அழுது கொண்டிருக்கிறேன் ......

காதலுக்கு கண் இல்லையாம்
கண்ணீர் மட்டும் எப்படி........?

நீ உன் உள்ளம் எனக்கு சொந்தம் என்றாய்
நான் என் உயிரே உனக்கு சொந்தம் என்றேன்
உன் மடி மீது நான் வருவேன் என்றாய்
நான் உன் மார்பில் சாய நின்றேன்
இன்று நீயோ என்னை வெறுக்கிறாய்
நானோ என்னையே வெறுக்கிறேன் .....

என் கனவுகளிலும்
நினைவுகளிலும்
கலந்தவனே
நீ இன்றி என் வாழ்வு
கனவாகிவிட்டது ......


கனவுகளில் கூட
கலங்குகிறேன்
என் காதலனான
நீ
என்னை
புரிந்து கொள்ளவில்லை
என்று ..........

கண்களில்
நீ வந்த போது
தூக்கத்தை மறந்தேன்
ஆனால்
கனவுகளுடன் விழிகளில் கலந்து
இதயத்தில் நிலையான போது
தினம் தினம்
கற்பனையில் மிதந்தேன்
நீ என்னை காதலிப்பதைப் போல் .....

நீ
உன்னை மறக்கச் சொன்னாய்
ஆனால் உயிரினில் கலந்தவன்
உன்னை மறப்பதென்றால்
நான் உயிரை விட வேண்டும்
உயிரை விடவா ?
இதற்கு பதில் கூறு
உன்னை மறக்கிறேன் ......
என்னை தொலைத்து என்
நினைவை தேடினேன் ...
என் நினைவை தொலைத்து
என் கனவை தேடினேன் ..
கனவை தொலைத்து
வாழ்வை தேடினேன் ..
எல்லாம் என்னை விட்டு
சென்று விட்டது அவனோடு ......
இனியவனே
என்னுள் இருக்கும்
உன் நினைவினை
அழித்துவிடலாமென்று
நினைக்காதே
அந்த சூரியன் கூட
என்னை எரிக்கலாம்
ஆனால்
என்னுள் இருக்கும்
உன் நினைவினை
அழிக்க முடியாது
நான் உயிருடன்
இருக்கும் வரை
கனவுகளில் மலர்வதில்லை
காதல்
இதயத்தில் மலர்வதே காதல்
இதயம் இறக்கும் வரை
உயிரானவனே
உன்னை நினைத்து துடிக்குமடா
என் இதயம் ......
என் கவிதைகளை நீ பார்க்கும் வேளை
நான் காதல் செய்த காலத்தை
நினைவு கொள்ளும் உன் உள்ளம்
உன் உள்ளம் நினைவு கொள்ளும்
காலத்தில்
உன்னை நினைத்து வாழ்ந்திடும் எந்தன்
நெஞ்சம் .................
உன்னை உயிராக நேசித்திடும்
என் உடல்
உயிர் வாழும் வரை உன்னை
பார்த்திடும் என் உள்ளம்
உள்ளம் உன்னை பார்த்திடும்
வேளை
நிலைத்திடும் என் காதல்
என் காதல் நிலைத்திடும்
வேளை
உன் நினைவினை வாழ்ந்திடும்
இந்த ஜீவன் .......
உன்னை நினைத்து நான் படும்
வேதனைகளை
கவிதையாக வடிக்கிறேன்
உன் காதலுக்காக
நான் துடி துடிக்கிறேன் என்பதை
என் கவிதைகளினூடாக
நீ புரிந்து கொண்டு
உன் காதலை
என்னிடம் சொல்வாய்
என்ற நம்பிக்கையில்
காத்திருக்கிறேன் கண்களில்
விழி நீரோடு .......

2 comments:

  1. நல்லாருக்குங்க ஒரு காதல் பிரிவின் வலி.. உணரமுடியலை இருந்தாலும் புரிஞ்சுக்க முடியுது...

    ReplyDelete
  2. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு!
    உண்மையை அழகாக அனுபவிச்சு எழுதியிருக்கீங்க!
    super!!!!!!!

    ReplyDelete