Monday, November 29, 2010



போய்விடு.........!!!!!!!


உந்தன் தொலைபேசி
அழைப்புக்கள்...............
என்னை உன்னோடு பேச
தூண்டினாலும்............
நீ இறுதியாய் சொன்ன
வார்த்தைகள்.........
வேண்டாமென தடுத்து
விடுகிறது...........




நான் சொன்னேனா என்னை
காதலி என்று..............
நீயாய் வந்தாய் உன்னை
பிடித்திருக்கிறது என்றாய்.........
என்னென்னவோ பேசினாய்........
ஒரு முறை இது நட்பு என்றாய்.....
இல்லை காதல் என்றாய்......
இறுதியில்..................................................
ஒன்றுமில்லை நீ வேறு
நான் வேறு என்று பிரிந்து
சென்றாய்.....................
இன்று மீண்டும் நீயின்றி...........
நான் இல்லை என
வசனம் பேசுகிறாய்............



நீ காதலித்த போதும்........
காதல் வேண்டாம் என
விலகிய போதும்...........
நீ என்னைப் பற்றி சிந்தித்தாயா...????
நான் உன் கைபொம்மையல்ல........
எனக்கும் இதயமுண்டு.......
இனியும்
என்னை தொடராதே.............
என் இதயம்
செத்துப் போய்விட்டது........
முயற்சிக்காதே.......
தோற்றுப் போவாய்..........
அதை உன் இதயம் தாங்காது..........




No comments:

Post a Comment