Sunday, November 21, 2010




மனதின் மூலையில்........



உன் பாத சுவடுகளின் வழியே
நான் சென்றடைந்த
பயணங்கள்............

காற்றை அலசி
நீ சுவாசித்த மூச்சை தேடியலைந்த
நிமிஷங்கள்............

மணல் வெளியில்
உன் பெயரெழுதி அதை
தொட்டு இரசித்த
கணங்கள்........

நெஞ்சக் கோப்பையில்
உன்னை மட்டும் நிறைத்து - நான்
நிறைந்திருந்த நொடிகள்........

அனைத்துமே
இன்று கனவாய்......
வெறும் கனவாய்............
மாறிப் போனாலும்.......

மனதின் ஒரு மூலையில்
நான் மனனம் செய்த
பத்துக் கட்டளையாய்
மறவாமல் (மறையாமல்) இருக்கிறாய்
நீ மறந்திடு என்று
சொன்ன பிறகும்..........





No comments:

Post a Comment