மனதின் மூலையில்........
உன் பாத சுவடுகளின் வழியே
நான் சென்றடைந்த
பயணங்கள்............
காற்றை அலசி
நீ சுவாசித்த மூச்சை தேடியலைந்த
நிமிஷங்கள்............
மணல் வெளியில்
உன் பெயரெழுதி அதை
தொட்டு இரசித்த
கணங்கள்........
நெஞ்சக் கோப்பையில்
உன்னை மட்டும் நிறைத்து - நான்
நிறைந்திருந்த நொடிகள்........
அனைத்துமே
இன்று கனவாய்......
வெறும் கனவாய்............
மாறிப் போனாலும்.......
மனதின் ஒரு மூலையில்
நான் மனனம் செய்த
பத்துக் கட்டளையாய்
மறவாமல் (மறையாமல்) இருக்கிறாய்
நீ மறந்திடு என்று
சொன்ன பிறகும்..........
No comments:
Post a Comment