Wednesday, September 1, 2010



காதல் வாழட்டும் .....


காதலனே !
நீ வருவதற்குள் நான்
மடிந்து விட்டால் - என்
அஸ்தியை மட்டுமாவது - உன்
கையால் கரைத்து விடு
அந்த தொடுகையிலாவது
வாழட்டும் நம் காதல் ...................



கண்ணீர் .....


உன் நினைவுகளை
எழுத முன்
என் கன்னங்கள்
நனைகின்றன ..........
கண்ணீருக்கு பொறுக்கவில்லை
முந்திச்சென்று அது
கடதாசியை
நனைக்கின்றது......


பிரிவு ......


பிரிந்த போதுதான்
தெரிந்தது - எனக்கு
நீ இல்லாமல் வாழ்வது
எப்படி என .......
புரிய வைக்கத்தான்
என் வாழ்வில் - நீ
வந்தாய் என்பது ......

No comments:

Post a Comment